புதிய வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்! பாகம் - 3

பேராசிரியர் பி ஜே ஜேம்ஸ்.

பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது பற்றி

மேற்கூறிய சுருக்கமான வரையறுப்புக்களின் அடிப்படையில், பாசிச எதிர்ப்பு தாக்குதல் கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்லாமல், 21 - ஆம் நூற்றாண்டின் நிதி மூலதனத்தின் இயக்க விதிகளின் உறுதியான மதிப்பீட்டின் அடிப்படையிலும் ஒரு நாட்டின் குறிப்பானவற்றிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும். புதிய பாசிசம் என்பது புதிய தாராளவாதத்தின் கீழ் கார்ப்பரேட்-நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளின் ஆட்சி என்பது வெளிப்படையாகும். எனவே, ஆளும் வர்க்க/முதலாளித்துவக் கட்சிகள் அடிப்படையில் புதிய தாராளவாத நோக்குநிலை கொண்டவை என்றாலும், அவை அனைத்தும் பாசிச சக்திகள் அல்ல. அதோடு கூட, சட்டத்தின் ஆட்சி, முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான - நியாயமான தேர்தலுக்காக நிற்கும் பிரிவுகள் போன்றவைகளும் அவற்றில் உள்ளன. இருப்பினும், புதிய தாராளவாதத்தின் வேர்களுடனும் கார்ப்பரேட் மூலதனத்துடனான தொடர்புகள், தேர்தல் அரசியலுடன் ஈடுபடுவது மட்டுமே செயல்பாட்டின் ஒரே வழிமுறையான அவர்களின் வர்க்க குணாம்சங்கள், இந்த கட்சிகள் முழுமையும் சமூக வாழ்க்கையின் நுண் அரசியல், பெரும் அரசியல் வெளிகளை (macro) அபகரித்துள்ள பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்முயற்சி எடுக்க இயலாமல் செய்துள்ளது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட மூல யுத்தி சமூக வாழ்நிலைகளில் இருந்து பாசிச கூடாரங்கள் துடைத்தழிக்கப்படும் வரை, பாசிச மீண்டும் வருவதற்கான அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் தேர்தல் வெற்றி மட்டும் போதாது.

அரசின் உறுப்புகள் மீதான கட்டுப்பாட்டுடன், காவி பாசிஸ்டுகள் தங்கள் பரந்துட்ட, இணை இல்லாத பலவிதமான அமைப்புகளின் கட்டமைப்பின் மூலம் போக்கிரிகள், துணை ராணுவ பயிற்சி பெற்ற குண்டர் படைகள் மூலம் 'தெருக்கள் அதிகாரத்தின் (Street Power)' மீது மாய கண்கட்டுவித்தை போன்ற கட்டுப்பாட்டை நிறுவியுள்ளனர். பாரம்பரிய (Classical) பாசிசத்தின் நிலைமையைப் போல அல்லாமல், தேர்தல்கள் இருக்கும் வரை பாசிஸ்டுகளுக்கு சவால் விடுவதற்கான தேர்தல் கோட்பாட்டளவில் இன்று நடைமுறையில் இருந்தாலும், சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் கடினமாகி வருகின்றன. அபரிமிதமான வெள்ளமென பாயும் கார்ப்பரேட் நிதியுதவியும், வலிமைமிக்க தெரு சக்தியும் (Street Power) முழுமையாக அரசு நிர்வாகத்தினை தங்களின் கட்டுபாட்டில் வைத்திருப்பதும் இதற்கு காரணங்களாகும். அபரிமிதமான வெள்ளமென பாயும் கார்ப்பரேட் நிதியுதவியும், வலிமைமிக்க தெரு சக்தியும் (Street Power) இரண்டற கலந்து இந்தியாவை மனுஸ்மிருதியின் கட்டளைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான பார்ப்பனீய இந்து சாமியார்களின் அரசாக (theocratic state) மாற்றுவதில் ஆர்.எஸ்.எஸ், பாஜக ஈடுபட்டுள்ளன. எனவே, நாடாளுமன்ற வேலைகளில் மட்டுமே ஈடுபாடு போதாது. நாடு தழுவிய பாசிச எதிர்ப்பு இயக்கம் இல்லாமல், பாசிஸ்டுகளை எதிர்கொள்ள முடியாது. பாசிச அல்லாத ஆளும் வர்க்கக் கட்சிகள் அடிக்கடி புறக்கணிக்கும் அம்சம் நாடு தழுவிய பாசிச எதிர்ப்பு இயக்கமாகும்.

'சமூக ஜனநாயகவாதிகள்' (எ.கா. CPM) முதல் சாகசக்காரர்கள் (எ.கா. மாவோயிஸ்டுகள்) வரை பரந்த 'இடது அலைவரிசைகள்' நிலவி வருகின்றன. பிந்தைய சாகசக்காரர்கள் பிரிவு, மதவெறியர்களுக்கான வெறும் ஆட்சி மாற்றமாக கருதுவதால் புதிய பாசிசத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான - பயங்கரவாத வர்க்க சாரத்தை புறக்கணிக்கின்ற குறுங்குழுவாத அணுகுமுறையின் காரணமாக ஆளும் வர்க்கங்களின் பாசிச சார்புக்கும், பாசிச அல்லாத பிரிவுகளுக்கு இடையே வேறுபாட்டைக் அதனால் காண முடியவில்லை. மறுபுறம், CPM - ஐப் பொறுத்தவரை, இந்தியாவில் பாசிசம் இன்னும் வரவில்லை. அதன் சித்தாந்தங்களின்படி, மோடி ஆட்சி ‘பாசிசமாக மாறும் விளிம்பில் உள்ளது. ‘பாசிசத்தின் அறிகுறிகள்’ மட்டுமே உள்ளதாக CPM வரையறுக்கின்றது. பாசிசத்திற்கான ஒரே மாதிரி வகை அணுகுமுறையிலிருந்து இந்த மதிப்பீடு எழுகிறது. இது புதிய பாசிசத்தை போர்களுக்கு இடையிலான காலத்தின் 'பாரம்பரிய பாசிசத்தின் (classical fascism) பாடநூல் நகலாகப்(textbook copy) பார்க்கின்ற ஒரு வழியாகும். புதிய பாசிசத்திற்கான இந்த இயந்திரகதியான அணுகுமுறை இயங்கியல்-பொருள்வாத பகுப்பாய்வுக்கு முரணானது. எந்தவொரு சமூக நிகழ்வும் ஒரு புதிய வரலாற்று சட்டகத்தில், வேறுபட்ட சமூக உருவாக்கத்தில் உருமாறி மேலும் வளர்ச்சியடையும் போது அந்த பருண்மையான சூழ்நிலைமையின் தனித்தன்மைகள், குறித்த தன்மைகளுக்கு தவிர்க்க முடியாமல் தன்னை மாற்றிக் கொள்ளும்.

துல்லியமாகச் சொல்வதானால், பாசிசத்தின் பருண்மையான வெளிப்பாடுகள் இடத்திற்கு ஏற்பவும், காலத்தை பொறுத்தும் மாறுபடும். பாரம்பரிய (கிளாசிக்கல்) பாசிசம் தோன்றிய காலனித்துவ காலத்துடன் ஒப்பிடும் போது, இன்று பாராளுமன்ற அமைப்பு முறை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது, மேலும் கார்ப்பரேட் கோடீஸ்வர்கள் (பில்லியனர்கள்) அரசு அதிகாரத்தின் கடிவாளத்தை தங்களிடம் வைத்திருப்பதிலும், கார்ப்பரேட்- நிர்வாக அறைகளில் (corporate-board rooms) கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டாலும் வெறும் கட்டிடமாகவே (edifice) பாராளுமன்றத்தை வைத்து கொண்டு தொழிலாள வர்க்கத்தின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இடைவிடாத புதிய பாசிச தாக்குதல்களை நடத்துவதில் திறமையானவர்களாகி விட்டனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ ஜனநாயகத்தின் திரையின் கீழ், புதிய தொழில்நுட்பங்கள் மூலமூம், காலநிலையைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் இயற்கையைக் கொள்ளை அடித்தல், அனைத்து சமூக கட்டுமானங்களையும் இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுத்தல் போன்றவற்றின் மூலம் புதிய பாசிசமானது, இன-பாரம்பரிய பண்பாட்டு இனச் சுத்திகரிப்பு, சிறுபான்மையினர்-புலம்பெயர்ந்தோர்- அகதிகள்- பெண்களை ஒடுக்குதல்- அழித்தல், கடின உழைப்பாலும் - மக்கள்திரள் போராட்டங்களாலும் வென்றெடுக்கப்பட்ட சம்பாதித்த ஜனநாயக உரிமைகளை ஒழித்தல், தொழிலாளர்கள் மீதான மிகை சுரண்டல் போன்ற பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தக் கூடியதாகி விட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி, சமூக ஜனநாயகவாதிகள் இனிமேல் வரவிருக்கும் பாசிசத்திற்காக தர்க்கரீதியாக காத்திருப்பது என்பது அவர்களும் தாங்கள் ஆட்சியில் வீற்று இருக்கும் போதெல்லாம் அதே தீவிர வலதுசாரி புதிய தாராளவாத கொள்கைகளை எங்கும் எப்போதும் செயல்படுத்துவர்களாக இருக்கிறார்கள் என்பதால் பாசிசத்திற்கான இயந்திரகதியான அணுகுமுறையுடனும், புதிய தாராளவாத-கார்ப்பரேட்மயமாக்கலின் மன்னிப்பாளர்களாகவும் (being apologists of neoliberal - corporatisation) சமூக சனநாயகவாதிகள் இருக்கிறார்கள்.

 எவ்வாறாயினும், பாசிசத்தின் மீதான இத்தகைய மாறுபட்ட கருத்துகள், ஆர்எஸ்எஸ் புதிய வகைப்பட்ட பாசிசத்தை எதிர்ப்பதற்கும் தோற்கடிப்பதற்கும் பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உடனடியான, இன்றியமையாத பணியைத் தவிர்ப்பதற்கான ஒரு நியாயமாக இருக்கக் கூடாது. சித்தாந்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் காலத்தின் தேவை என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் ஐரோப்பாவில் பாசிஸ்டுகள் முன்னேறியபோது பல கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போலவே தற்கொலை செய்துகொள்ளும் வகையில் இருந்தது போன்று அத்தகைய அகில இந்திய இயக்கம் தயாராகும் வரை நாம் காத்திருக்க முடியாது.

1930களில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டபோது, பாசிஸ்டுகளால் ஏற்கனவே அதிக சேதம் ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில், பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் போது பரந்த ஐக்கிய முன்னணியில் இணைந்த ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளின் அடிப்படையில் வேறுபட்ட வர்க்க நலன்களைப் பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்ளத் தவறியதும், பாசிசத்தின் தோல்வியைத் தொடர்ந்த தவறான மதிப்பீடுகள் பல திருத்தல்வாத-சந்தர்ப்பவாத விலகல்களுக்கு உலகளாவிய அளவிலும், தேசிய அளவிலும் வழிவகுத்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புதிய வகைப்பட்ட காலனித்துவ தாக்குதலைத் தொடங்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் 1943 - இல் கம்யுனிஸ்ட் அகிலம் கலைக்கப்பட்டது, இந்த சர்வதேச விலகலுக்கு ஒரு சரியான எடுத்தக்காட்டு ஆகும். அதே காலத்தில் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் நிதிமூலதன முதலாளியத்தின் பிரிவுகளுடன் செயல்தந்திரரீதியிலான கூட்டணியை மாற்றுவதற்கு அழைப்பு விடுத்ததானது, தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான நீண்டகால மூல உத்தியிலான கூட்டணியில் இந்த விலகலினால் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சியில் திசைவிலகல் பிரவுடரிசம் (Browderism) உருவானதும் உள்நாட்டு எடுத்துக்காட்டாகும்.

 இத்தகைய கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் பார்க்கும்போது, புதிய பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் இல்லாததை ஒப்புக் கொண்டாலும், குறுங்குழுவாத, சந்தர்ப்பவாத விலகல்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும். மிகவும் பிற்போக்குத்தனமான கார்ப்பரேட்-முதலாளித்துவம், அவர்களால் முட்டுக் கொடுக்கப்பட்ட புதிய பாசிச அரசுக்கு எதிராக ஆளும் வர்க்கங்களின் பாசிச அல்லாத பிரிவுகளுடன் கூட்டுச் சேரும் அதே வேளையில், கம்யூனிஸ்டுகளும் முற்போக்கு சக்திகளும் இன்று முதலாளித்துவத்தின் பல்வேறு பிரிவுகளிடையான ஒன்றுடன் ஒன்றும், ஊடுருவியும், சிக்கலானதுமான வர்க்க நலன்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். சமூக ஜனநாயகவாதிகளுடன் ஐக்கிய முன்னணி என்ற கேள்வி வரும்போது, அயராத சித்தாந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி (CPM) போன்ற சமூக ஜனநாயகவாதிகள் அதிகாரத்திலிருந்து கொண்டு கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்யும் போது, இந்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் எந்த மெத்தனமும், ‘பாசிச எதிர்ப்பு ஒற்றுமை’

 நலன்களுக்காக கம்யூனிஸ்டுகளின் சித்தாந்த-அரசியல் வழியை சரணடையச் செய்து, இறுதியில் பாட்டாளி வர்க்க தனித்துவத்தை-சுதந்திரத்தை தியாகம் செய்வதற்கும், வர்க்கப் போராட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கும் வழிவகுக்கும்.

வர்க்கப் போராட்டம் என்பதை பாசிச-எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிரானதாக நிறுத்துவது அல்லது இந்த இரண்டையும் தண்ணீர் புகாத பெட்டிகளில் இறுக்கமாக அடைத்து வைப்பது அல்லது ஒன்றுக்கு பின்பாக ஒன்றை வைப்பது என்பது இதன் பொருள் அல்ல; மாறாக இரண்டு போராட்டங்களும் பாசிச சூழலில் பிரிக்க முடியாதவையாகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாகவுமே இருக்கிறது. கார்ப்பரேட்-காவி பாசிச ஆட்சிக்கு எதிரான பல போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன அல்லது வளர்ந்துகொண்டு இருகின்றன. இவை இந்துத்துவ பாசிசத்திற்கும், தீவிர வலதுசாரி புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை இணைக்கின்றன. அதாவது இவை பாசிச எதிர்ப்பு போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தின் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முஸ்லீம்களுக்கு குடியுரிமை மறுப்புக்கு எதிரான மக்கள் இயக்கமான குடியுரிமை திருந்த சட்டம் (CAA ) எதிர்ப்பு இயக்கம், விவசாயத்தினை கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கம் ஆகிய இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் கிட்டத்தட்ட அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும், பணக்கார விவசாயிகளின் அமைப்புகள் - கட்சிகள் முதல் ஒடுக்கப்பட்ட மக்கள்திரள் அமைப்புகள் - கட்சிகள் வரை தீவிரமாகப் பங்கேற்றன.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளை உள்ளடக்கிய அனைத்து பாசிச எதிர்ப்புப் பிரிவுகளுடன் ஒன்றிணைந்து, கார்ப்பரேட் மயமாக்கல், காவி-பாசிச சக்திகளுக்கு எதிராக நீடித்த, சமரசமற்ற போராட்டங்களை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் நாடு முழுவதும் உருவாகி வருகின்றன. இப்போராட்டங்களில், தகுந்த அமைப்புரீதியான தலையீடுகள் செய்யப்பட்டால், தொழிலாளி வர்க்கம் குறிப்பாக அமைப்புசாரா பிரிவினர், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்கள், தலித்துகள், பழங்குடிமக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள், மற்றும் இளைஞர்கள், மாணவர்கள், கார்ப்பரேட் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடியவர்கள், தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், சுற்றுச்சூழல் அழிவு - சாதிக் கொடுமைகள் - மதவெறி ஒடுக்குமுறைக்காக அகற்றப்பட்டவர்கள், சனநாயக உரிமை மீறல் இன்னும் பலவற்றிக்கு எதிராக மக்கள் இணைவார்கள். மக்களின் இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களோடு, புதிய தாராளவாதக் கொள்கைகள், ஆர்.எஸ் எஸ் புதிய பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியலை நோக்கிய விவாதங்களையும் உரையாடல்களையும் தொடங்குவதற்கு உணர்வுபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 இத்தகைய முன்முயற்சிகள் புரட்சிகர இடது, ஜனநாயக, போராடும் சக்திகளுடன் இணைந்து மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும். இது கார்ப்பரேட்-இந்துத்துவா பாசிசத்திற்கு எதிராக ஒரு நாடுதழுவிய ஒருங்கிணைப்பை ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கும் சூழலை உருவாக்கலாம். இது தேர்தல் போராட்டங்களில் புதிய பாசிஸ்டுகளை தனிமைப்படுத்தல், தோற்கடிப்பதற்காக நீட்டிக்கப்படலாம். புதிய மனுஸ்மிருதிவாதத்திற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் பேராதரவின் கீழ் தலித்துகளுக்கு எதிராக வளர்ந்து வரும் மனிதாபிமானமற்ற பார்ப்பன சாதிய பழக்கவழக்கங்களும் எதிராக பயனுள்ள எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதும் இங்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். எனவே இந்திய பாசிசத்தின் கருத்தியல் அடிப்படையான மனுஸ்மிருதி அடிப்படையிலான இந்துத்துவ வாதத்திற்கு எதிராக அனைத்து முற்போக்கு அறிவுஜீவிகள் , ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து பொருத்தமான கோட்பாட்டுரீதியான, அரசியல்ரீதியான கூட்டான தலையீடுகள் பாசிச எதிர்ப்பு போராட்டங்களில் தவிர்க்க இயலாத கூறுகளாக இருக்கும்.

பாராளுமன்றத்தில் போராட்டங்கள், பாராளுமன்றம் அல்லாத போராட்டங்களை உள்ளடக்கிய அத்தகைய இயக்கம், முறையாக தொடங்கப்பட்டால், குறிப்பான நிலைமைகளில் தேர்தல் போராட்டங்களில் பாராளுமன்ற கட்சிகளின் பாசிசம் அல்லாத பிரிவுகளுடன் செயல் தந்திரோபாய கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளையும் விரிவாகக் கண்டறிய முடியும். இது பாசிச எதிர்ப்பு இயக்கத்தை ஆளும் வர்க்கங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை திறம்படப் பயன்படுத்தி பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துள்ள பிற்போக்கு சக்திகளைத் தனிமைப்படுத்த உதவும்.

மேற்கண்ட கண்ணோட்டத்தினை முழுமையாக உள்வாங்கி பார்ப்பனீய இந்துத்துவ கார்ப்பரேட் பாசிசத்தினை தோற்கடிப்போம்!!

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.