பார்ப்பன பயங்கரவாதி அத்வானிக்கு பாரத ரத்னா விருது! வெட்கக்கேடு!
பாபர் மசூதி இடிப்பை முன் நின்று நடத்திய ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையின் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி என்ற எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பாகவே ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற அரசியலை முன்வைத்து இந்தியா முழுவதும் ரத யாத்திரை நடத்தியது ஆர்எஸ்எஸ். அதில் முன்னிலை வகித்த நபர்தான் இந்த அத்வானி. இந்த ரத யாத்திரை இஸ்லாமியர்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் எதிரான கலவரங்களை தூண்டியது. இந்த ரத யாத்திரை ரத்த யாத்திரையாக மாறியது. படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் ரத்தத்தினாலும், அவர்களை கொன்று புதைத்து அதன் மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழங்கிய பாசிச குண்டர் படை தலைவனான அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் ‘பொருத்தமானதுதான்.’ ஏனென்றால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க வீடின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது ராமனுக்கு கோவில் என்ற பெயரில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்து உள்ளனர். 90களில் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் இந்தியாவின் மீது திணித்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற