இயற்றும்.., ஈட்டும்.., ஆனால் காக்காத அரசு!
100 நாள் வேலை திட்டமென்பது ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு (தனி நபருக்கு அல்ல) 100 நாட்களுக்கு வேலை வழங்குவது. இது அவர்களது வாங்கும் சக்தி விழாமல் காக்க கொண்டு வரபட்டத் திட்டமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே கிராம புறங்களில் வேலையின்மையும் வறுமையும் அதிகமாகிவருகிறது, அதற்கேற்ப 100 நாள் வேலையை நாடி வரும் மக்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கொரோனா ஊரடங்கு, தொடர்ந்து தொழில் முடக்கம் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களை கடந்து தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 100 நாள் வேலையை நாடும் குடும்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது. உச்ச பட்சமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில். இந்த நிதியாண்டில் மட்டும் 7.17 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தை நாடியுள்ளன. 40 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தங்களுக்கான 100 நாட்கள் முடிந்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகபடுத்தபட்டதிலிருந்து வரலாறு காணாத அளவிற்கு அதிகம். 100 நாள் வேலைத் திட்டத்தை _நாடிய_குடும்