பரமார்த்த குருவும் சீடர்களும்!
பரமார்த்த குரு பண்டைய ஆடைகளை கலைந்து நவீன பாணியில் டக்கராக ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் சகிதம் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். குருவே இருப்புக்கு ஆபத்து! இருப்பிடத்துக்கும் ஆபத்து! ஆசிரமத்தை தூக்க வந்து கொண்டிருக்கிறது அரசு படை! இதற்குப் பெயர் ஏதோ பாசிசமாம், என்று பகர்ந்தனன் மட்டி. பாசிசத்தை விரட்ட வழி ஏதும் உண்டா? குருவே பகர்வீர்! பாசிசத்தை பற்றி சரியாக புரிந்து கொள்ளாத இடது, வலது கம்யூனிஸ்டுகளுடன் அணி சேர்ந்து விரட்ட முடியாது! ஏனென்றால் அவர்கள் போலிகள் என்று தாடியை தடவினார் பரமார்த்தார்! முன்னொரு காலத்தில் கேப்டனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்தனர் அரசியல் கோழைகள் என்றும் எரிச்சல் அடைந்தார் குரு. மண்ணின் மைந்தன் ஆனாலும் பழங்குடியானாலும், கல்லையும், மண்ணையும், கனிம வளங்களையும் சுரண்டி கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் கனவான்களை தட்டிக் கேட்பவர்களை கட்டி உரிக்கிறது பாசிசம் என்றனன் மடையன். சமூக நீதி,, மொழி உரிமை இன உரிமை, மாநிலத்தின் தனி உரிமை என்று பேசினாலும் திராவிட மாடல் பெயரைக் கொண்டு கார்ப்பரேட் சுரண்டலுக்கு துணை நிற்பதால் திமுக நமக்காகாது என்று கண்ணாடியை சரி செய்து கொண