சங்கி முட்டாள்களுக்கு நன்றி!
“ஒரு கல் ஒன்றை தூக்கிக் காலில் போட்டுக் கொண்ட முட்டாள்கள்” என்று ஏகாதிபத்தியங்களைப் பற்றி நையாண்டி செய்வார் தோழர் மாவோ. அதுபோல, மனுதர்மத்திலும், வேத, ஆகமங்களிலும் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி ஒரு 'ஹைக்கோர்ட்’ (உபயம் எச். ராஜா) அளவு கூட தெரியாத பார்ப்பன கழிசடைகள் மற்றும் அவர்களின் பாதம் தாங்கிகளான சங்கி முட்டாள் கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா மனு தர்மத்திலும், வேதங்களிலும் சூத்திரர்கள், பஞ்சமர்களை பற்றி எந்த அளவிற்கு இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் ஒரு முறைதான் பேசினார். ஆனால், முட்டாள் சங்கி கூட்டமோ அதை சுவரொட்டி எழுதி ஒட்டுவது, யூடியூப் சேனல்களில் கதறுவது, மாமிகளை வைத்து வைய வைப்பது, நீதி அரசர்களின் மூலம் கருத்து செல்பவர்களை ஒடுக்குவது போன்று பல 'அவதாரங்களை' எடுத்ததால் இன்று இளைஞர்கள் மத்தியில் அந்த மனுதர்மம் மற்றும் வேத, ஆகமங்களில் என்ன ஹைக்கோர்ட்தான் இருக்கிறது எனத் தேட ஆரம்பித்து விட்டார்கள். தந்தை பெரியாரின் புத்தகங்களுக்கு மீண்டும் ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. வாழ்நாள் முழு