Posts

Showing posts from September, 2022

சங்கி முட்டாள்களுக்கு நன்றி!

Image
  “ஒரு கல் ஒன்றை தூக்கிக் காலில் போட்டுக் கொண்ட முட்டாள்கள்” என்று ஏகாதிபத்தியங்களைப் பற்றி நையாண்டி செய்வார் தோழர் மாவோ. அதுபோல, மனுதர்மத்திலும், வேத, ஆகமங்களிலும் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி ஒரு 'ஹைக்கோர்ட்’ (உபயம் எச். ராஜா) அளவு கூட தெரியாத பார்ப்பன கழிசடைகள் மற்றும் அவர்களின் பாதம் தாங்கிகளான சங்கி முட்டாள் கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா மனு தர்மத்திலும், வேதங்களிலும் சூத்திரர்கள், பஞ்சமர்களை பற்றி எந்த அளவிற்கு இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் ஒரு முறைதான் பேசினார். ஆனால், முட்டாள் சங்கி கூட்டமோ அதை சுவரொட்டி எழுதி ஒட்டுவது, யூடியூப் சேனல்களில் கதறுவது, மாமிகளை வைத்து வைய வைப்பது, நீதி அரசர்களின் மூலம் கருத்து செல்பவர்களை ஒடுக்குவது போன்று பல 'அவதாரங்களை' எடுத்ததால் இன்று இளைஞர்கள் மத்தியில் அந்த மனுதர்மம் மற்றும் வேத, ஆகமங்களில் என்ன ஹைக்கோர்ட்தான் இருக்கிறது எனத் தேட ஆரம்பித்து விட்டார்கள். தந்தை பெரியாரின் புத்தகங்களுக்கு மீண்டும் ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. வாழ்நாள் முழு

பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

Image
பாட்டாளி வர்க்க கட்சியின் செயல்பாட்டிற்கு போர்த்தந்திரங்களும் செயல் தந்திரங்களும் முக்கியமானது. புரட்சிக்கு தலைமை தாங்கும் அறிவியல் பூர்வமான கலை போர்த் தந்திரம் மற்றும் செயல் தந்திரம் பற்றிய செயல்பாடுதான் என்கிறது மார்க்சியம். வர்க்கப்போராட்டம் என்பது வெறும் பொருளாதார வகைப்பட்ட போராட்டங்கள் மட்டுமல்ல. இந்தியாவில் கம்யூனிசத்தின் பெயரால் செயல்படும் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள் வர்க்கப் போராட்டம் என்று ஆசான்கள் சொல்வதை வெறும் பொருளாதாரவாத போராட்டமாக சுருக்கி புரிந்து கொள்வதும், பரந்துபட்ட மக்களை அரசியல்படுத்தும் செயல்தந்திர கடமையை புறக்கணிப்பதும் பொதுபோக்காவே உள்ளது.  அராஜகவாதிகள், நவீன அராஜகவாதிகள் முன்வைக்கும்இவற்றை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டிய நிலையில்தான் இந்தியாவில் மார்க்சிய லெனினிய இயக்கம் உள்ளது. அதற்கு மார்க்ஸ் எங்கல்ஸ் உள்ளிட்ட ஆசான்களின் நூல்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது மாரிஸ்கன் போர்த்தின் இந்த நூல். பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ் மார்க்சு: சர்வதேச தொழிலாளிகள் கழகத்திற்காற்றிய தொடக்க உரை இப்பேச்சு மார்க்சு 1864-ல

அன்பார்ந்த வாசகத் தோழர்களே!

Image
  வினை செய் முகநூல் பக்கம் மற்றும் வலைப்பக்கம் ஆகியவற்றில் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வருகிறோம் . சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை கிளர்ந்து எழச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் எமக்கு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம் . தமிழகத்தை பொறுத்தவரை சமூக வலைதளங்களில் தீராத குழு ச் சண்டைகள், தனிநபர் தாக்குதல்கள், வசவுகள், துதி பாடல்கள் போன்றவையே கோ லோ ச் சுகின்றன . பழங்காலத்தில் ஊர் செய்திகளை அறிந்துகொள்வதற்கு தெருமுக்கூட்டில் அல்லது ஆலமரத்தடியில் அமர்ந்து திண்ணை வேதாந்தம் பேசுவதன் மூலம் ஒருவரை ஒருவர் சொரிந்து கொண்டும், புகழ்ந்து கொண்டும் பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள் . ஆனால், ஒவ்வொருவரும் கையில் ஒரு செய்தியை கொண்டு வந்து பேசி ஊர் பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு பிடி பிடிப்பார்கள். அது போலவே சமூக வலைதளங்கள் என சொல்லப்படும் பல்வேறு கம்பெனிகளிடமிருந்து தனிநபர் தாக்குதல்கள், சமூகத்தை நேசிக்கின்ற போராடுகின்ற இயக்கங்களை பற்றிய அவதூறுகள், வசவுகள், இழிதகமை கொண்ட பொய் ப் புரட்டுகள் வாரி வீசப்படுகிறத

நாட்டிற்கு தேவை கலகக்கார பெரியார்!

Image
செப்டம்பர் 17 பெரியாரின் 114வது பிறந்த தினத்தை தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பெரியார் சிந்தனையாளர்கள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதைப் போல கொண்டாடினர். தமிழகத்தை ஆளும் திமுக திருச்சி அருகில் உள்ள சிறுகனூரில், தந்தை பெரியார் உலகம் அமைவதற்கு அடிக்கல் நாட்டி பெரியார் பிறந்த நாளை கொண்டாடியது. அதுமட்டுமின்றி, தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் உறுதிமொழி ஏற்கும் தினமாகவும் மாற்றியுள்ளது. ஆனால், மக்கள் அதிகாரம் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த தினத்தை கிளர்ச்சிகரமான நாளாக அறிவித்தது. பெரியார் என்றால் பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, திராவிட பாரம்பரியத்தின் அடையாளம் போன்ற அனைத்தையும் தாண்டி, கலகக்கார பெரியாராக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை மக்கள் அதிகாரம் உணர்த்தியது. இந்திய சமூக அமைப்பை செல்லரித்து தின்று கொண்டிருக்கும் சாதிய, வர்ணாசிரம கட்டமைப்பை அடித்து நொறுக்குகின்ற வகையில் அதற்கு சட்டப்படி அங்கீகா

சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !

Image
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஐரோப்பிய சமூக ஜனநாயகத்திற்கு பாராம்பரியம் இருந்ததில்லை; ஆனால் சீன மென்ஷ்விசத்திற்கு ஒரு பாராம்பரியம் இருந்திருக்கிறது. இந்த ரக போலி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்களை, போலி போல்ஷ்விக்குகளை அவர்கள் வார்த்தைகளை வைத்து, பொதுவான தோற்றத்தை வைத்துக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். பேச்சில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பதங்களை உபயோகப்படுத்தக் கூடும். வெளிக்கு அதிக புரட்சிகரமானவர்களாகவும், அதிக கடுமையாக உழைப்பவர்களாகவும், விசேஷமான சுமூகத் தன்மையும், அதிக நட்பும் கொண்டவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தத்தை வைத்து சோதிப்பது அவர்கள் வேலையை விமர்சன உணர்வுடன் பரீட்சிப்பது என்றால் ஒரேநடுக்கமாக நடுங்குகின்றனர். வேறெதைக் கண்டும் இவர்கள் அஞ்சுவதில்லை . அதனால் இந்த ரகத்திலுள்ள நபர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய உண்மையான முகலட்சணத்தை நடைமுறையின் மூலம், அவர்கள் வேலையின் மூலம், பிரச்சினைகளை புரிந்து கொள்வதிலும் சமாளிப்பதிலும் கைக்கொள்ளும் முறை மூலம், அவர்கள் வேலையின் பலனை பரிசீலிப்பதன் மூலம், அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது.

செப்டம்பர் 17:மனுதர்ம, வேத, ஆகம எரிப்பு போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டும்!

Image
  “பார்ப்பனியமே இந்து மதம், சாதியமே அதன் உயிர் நாடி” என்பதால்தான் சாதி ரீதியாக இந்து மதம் உருவாக்கி வைத்திருக்கும் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகக் கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கும் எந்த அம்சத்தையும், பார்ப்பன இந்து மத வெறியர்கள், பார்ப்பனர்கள், அவர்களின் அடிமைகளாக செயல்படும் கருப்பு பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பார்ப்பன இந்து மதம் படிநிலை சாதி அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது என்று தோலுரித்தார் டாக்டர் அம்பேத்கர். ஒவ்வொரு வர்ணமும், அந்த வர்ணத்துக்கு உட்பட்ட சாதியும் அல்லது அதன் உட்சாதிகளும் இணைந்த தனித்தனி அடுக்குகள் படிப்படியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் இந்திய சமூக அமைப்பின் தனிச்சிறப்பான அம்சமாகும். பிற அடுக்குகளில். அதாவது, பிற வர்ணத்திற்குரிய சாதிகளில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும், அவர்களின் மீது கொலை உள்ளிட்ட எத்தகைய தாக்குதல் நிகழ்ந்தாலும், பிற அடுக்குகளில் உள்ளவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இதுதான் பொதுவாக இந்துக்களின் மனோபாவமாக உள்ளது. மனுதர்மம், வேதம், ஆகமம், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் எண்ணற்ற வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் சூத்திர, பஞ்சம சா
பெல்லா சியாவோ இத்தாலியில் பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் செயல்பட்ட பல்வேறு பிரிவினர்களின் குரலாக ஒலித்தது பெல்லா சியாவோ என்ற நாட்டுப்புறப் பாடல். குறிப்பாக 1942 க்கு 1945க்கும் இடையில் இத்தாலியை ஆக்கிரமித்த நாஜிச கட்சிக்கு எதிராக போராடிய பாசிச எதிர்ப்பு போராளிகள் பயன்படுத்திய விடுதலை முழக்கமாகவும் பாடலாகவும் இத்தாலியின் வீதி எங்கிலும் எதிரொலித்தது பெல்லா சியாவோ! இன்று உலகமெங்கிலும் பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற பல்வேறு நாடுகளில் இந்த மெட்டில் அமைந்த பாடல் எதிரிகளை எதிர்த்து தெறிக்கிறது. பாசிசத்தை எதிர்த்து போராடும்போது அந்த நாட்டின் வரலாற்று புகழ் முதல் முதலாக பாரம்பரியத்தின் சொந்தக்காரர்களாக உள்ள கலை இலக்கியம் பண்பாடு பாசிச எதிர்ப்பு போராளிகளின் மரபு அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினத்தில் மக்கள் அதிகாரம் மனுதர்ம, வேத - ஆகம குப்பைகளை எரிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு என்று பேசும்போதோ இந்தியாவில் பார்ப்பன பாசிசம் காவி பாசிசம் என்று பேசும்போது பெரியாரின் பங்களிப்பை மறுக்கின்ற யாரால