பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிபடுத்த, ஆசிரியர்களின் நடத்தைகள் சோதிக்கப்பட வேண்டும்.
ஆன்லைன் கல்வியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்ஸப் மூலம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்புவது, பொருத்தமற்ற முறையில் ஆடைகள் அணிந்து வகுப்பில் கலந்து கொள்வது, மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்வது (அரட்டை அடிப்பது), அதில் மோசமான நகைச்சுவைகளை அனுப்புவது போன்ற ஆன்லைன் குற்றங்கள் பெருகி வருகின்றன. கே.கே.நகர் பி.எஸ்.பி.பி பள்ளி முன்னாள் மாணவர்களும், இந்நாள் மாணவர்களும் ராஜகோபாலன் என்ற ஆசிரியரால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகாரளித்து இவ்விசயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இது போல், பல மாணவர்கள் புதிய புகார்களை வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பக்கம், தமிழக அரசு, கமிட்டி அமைத்து இது போன்ற பாலியல்ரீதியான வன்முறைகள் குறித்த புகார்களை விசாரித்தாலும், மறுபக்கம் பள்ளிகள் ஆன்லைன் கல்வி மூலம் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரக்ஷித் தாண்டன் என்ற இணைய பாதுகாப்பு நிபுணர் கூறுகையில், “கடந்த ஆண்டு கோரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில்