அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.
4. கர்வம் தலைக்கேறி தாங்கள் பெரிய கொம்பு, மிக உயர்ந்த பேராற்றல் மிக்கவர் என்று எண்ணிக்கொண்டு செயல்படும் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மக்களின் மீது அதிகாரம் செய்துகொண்டு, அதைப் பார்த்து மற்றவர்கள் தம்மிடம் பணிந்து பயபக்தியுடன் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பொறுக்கமுடியாத திமிர் பிடித்தவர்களாகவும், மற்றவர்களைத் தமக்குச் சமமாக மதிக்காதவர்களாகவும் உள்ளனர். மேலும் அவர்கள் அடிக்கடி மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர்; அல்லது காட்டுத்தனமாகக் கூச்சலிட்டு மக்களை இழிவுபடுத்துகின்றனர். இவ்வகை அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ மேலாண்மையாளரைப் போலவே நடந்து கொள்கின்றனர். 5. அறியாமையும் தகுதியின்மையும் கொண்டவர் களாக இருந்தபோதிலும், சில அதிகாரிகள் தங்களின்கீழ் பணிபுரிபவர்களிடம் அறிவுரையோ, ஆலோசனையோ கேட்பது தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என்று எண்ணுகின்றனர். பீற்றிக் கொள்வது, ஊதிப் பெருக்க வைத்துக் காட்டுவது ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட இவாகள், மத்திய நிர்வாக அமைப்புகளுக்கு தவறான அறிக்கைகளை அடிக்கடி அனுப்புகின்றனர். இவர்கள் தவறான அல்லது திசை திருப்பும் அறிவிப்புகளை-அறிக்கைகளைஉருவாக்குவதோ