Posts

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.

4. கர்வம் தலைக்கேறி தாங்கள் பெரிய கொம்பு, மிக உயர்ந்த பேராற்றல் மிக்கவர் என்று எண்ணிக்கொண்டு செயல்படும் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மக்களின் மீது அதிகாரம் செய்துகொண்டு, அதைப் பார்த்து மற்றவர்கள் தம்மிடம் பணிந்து பயபக்தியுடன் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பொறுக்கமுடியாத திமிர் பிடித்தவர்களாகவும், மற்றவர்களைத் தமக்குச் சமமாக மதிக்காதவர்களாகவும் உள்ளனர். மேலும் அவர்கள் அடிக்கடி மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர்; அல்லது காட்டுத்தனமாகக் கூச்சலிட்டு மக்களை இழிவுபடுத்துகின்றனர். இவ்வகை அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ மேலாண்மையாளரைப் போலவே நடந்து கொள்கின்றனர். 5. அறியாமையும் தகுதியின்மையும் கொண்டவர் களாக இருந்தபோதிலும், சில அதிகாரிகள் தங்களின்கீழ் பணிபுரிபவர்களிடம் அறிவுரையோ, ஆலோசனையோ கேட்பது தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என்று எண்ணுகின்றனர். பீற்றிக் கொள்வது, ஊதிப் பெருக்க வைத்துக் காட்டுவது ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட இவாகள், மத்திய நிர்வாக அமைப்புகளுக்கு தவறான அறிக்கைகளை அடிக்கடி அனுப்புகின்றனர். இவர்கள் தவறான அல்லது திசை திருப்பும் அறிவிப்புகளை-அறிக்கைகளைஉருவாக்குவதோ

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடும் கம்யூனிஸ்டுகள்!

"அதிகாரத்துவம் என்பது தாராளவாதம், தனிநபர் வாதம், கட்டளை வாதம்,  வழமை வாதம், மையமில்லா வாதம், துறை வாதம், குழுவாதம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகும்" என்கிறார் தோழர் மாவோ. அரசியல் சித்தாந்த ரீதியாக ஓட்டாண்டித்தனத்தில் மூழ்கி போகும் தலைமை, தனது தலைமையை தக்க வைக்க கையில் எடுத்துக் கொள்கின்ற அதிகாரத்திற்கு  மறுபெயர் மேற்கண்ட அம்சங்களில் கண்டிப்பாக வெளிப்படுகிறது. இத்தகைய "அதிகாரத்துவம் என்பது நமது தலைமை உறுப்புகளை பெரிதும் தாக்கக்கூடிய ஒரு அரசியல் நோய்" என்கிறார் தோழர் மாவோ. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் ஜனநாயக மத்தியத்துவ விழுமியங்களுக்கு கட்டுப்படாமல், தான்தோன்றித்தனமாக தன்னுடைய விருப்பத்தை அமல்படுத்துவது என்பது அதிகாரத்துவத்தின் துலக்கமான வெளிப்பாடுதான். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக பிளவுபடாத , வலது, இடது சந்தர்ப்பவாத போக்குகளுக்கு  ஆட்படாத எமது அமைப்பிற்குள் 2020 ஆம் ஆண்டு இத்தகைய அதிகாரத்துவ போக்கு அமைப்பை பிளவு படுத்தியது. கார்ப்பரேட் காவி பாசிசம் நாடு முழுவதும் மிகப்பெரும் அபாயமாக, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராக தாக்குதலை

பாசிச பாஜகவை எதிர்த்து தெருவில் நடக்கும் எமது போராட்டங்கள்!

Image
“பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! இந்தியாவை ஆதரிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் கடந்த ஐந்து மாத காலமாக பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கார்ப்பரேட் காவி பாசிச சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்ற சூழலில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று நாங்கள் முன்வைத்த போது அதன் அனைத்து பரிமாணங்களையும் ஆய்வு செய்தே முடிவு செய்திருந்தோம். தேர்தலுக்கு வெளியில்தான் பாசிச பாஜகவையும், கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் வீழ்த்த முடியும் என்பதில் எமக்கு குழப்பமோ, ஐயங்களோ எதுவும் இல்லை. நாட்டின் பெரும்பான்மை மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட தருணத்தில் தேர்தல் அரசியலை முன்வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது வெறுமனே புறக்கணிப்பு என்று சொல்லிக்கொண்டு தனது குட்டி முதலாளித்துவ வர்க்க வாழ்க்கை குலையாமல் வீட்டில் இருந்து கொண்டே செயல்படுவது பொருத்தமானது அல்ல என்று முடிவெடுத்தோம். நாங்கள்

பார்ப்பன பயங்கரவாதி அத்வானிக்கு பாரத ரத்னா விருது! வெட்கக்கேடு!

பாபர் மசூதி இடிப்பை முன் நின்று நடத்திய ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையின் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி என்ற எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பாகவே ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற அரசியலை முன்வைத்து இந்தியா முழுவதும் ரத யாத்திரை நடத்தியது ஆர்எஸ்எஸ். அதில் முன்னிலை வகித்த நபர்தான் இந்த அத்வானி. இந்த ரத யாத்திரை இஸ்லாமியர்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் எதிரான கலவரங்களை  தூண்டியது. இந்த ரத யாத்திரை ரத்த யாத்திரையாக மாறியது. படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் ரத்தத்தினாலும், அவர்களை கொன்று புதைத்து அதன் மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழங்கிய பாசிச குண்டர் படை தலைவனான அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் ‘பொருத்தமானதுதான்.’ ஏனென்றால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க வீடின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது ராமனுக்கு கோவில் என்ற பெயரில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்து உள்ளனர். 90களில் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் இந்தியாவின் மீது திணித்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற

மோடி ஆட்சி: நிழல் தரா வாய்ப் பந்தல்.

 நன்றி, மார்க்சிஸ்ட் ரீடர் தாமஸ் ஐசக் தமிழில்: க.சுவாமிநாதன் மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் பற்றி பா.ஜ.க செய்யும் பிரச்சாரமும், நமது பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளது . பிரச்சாரம் – 1 2029இல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர உள்ளது. இதோ “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP – Gross Domestic Product) வளர்ச்சியில் இந்தியாவின் ரேங்க் 2014 – 10 2015 – 7 2019 – 6 2022 – 5 (பிரிட்டனை முந்தி) 2027 – 4 (ஜெர்மனியை விஞ்சும்) 2029 – 3 (ஜப்பானை விஞ்சும்) பதில் 1) ஜி.டி.பி. என்ற அளவுகோல் மட்டும் உண்மை நிலையை பிரதிபலிப்பது அல்ல. அதை மட்டும் முன்னிறுத்தி வளர்ச்சி பற்றி பேசுவது பொய்ச் சித்திரம் ஆகும். வாதத்திற்காக ஜி.டி.பி யை அளவுகோலை எடுத்துக் கொண்டால்கூட உலகின் 3வது பொருளாதாரம் என்ற ரேங்க்கை எட்டும்போதும் இந்தியா ஒரு குறை வளர்ச்சி கொண்ட நடுத்தர வருமான நாடாகவே இருக்கும். காரணம், * உலக ஜி.டி.பி யில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. 2027இல் இந்தியாவின் ஜி.டி.பி. அமெரிக்க ஜி.டி.பியில் ⅙ பங்குதான் இருக்கும். சீனாவின் ஜி.டி.பியில் ⅕ பங்குதான் இருக்கும். 2) மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது சரியான அளவுகோல்

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தப் போராடிவரும் கம்யூனிச புரட்சியாளர்கள் இரண்டு வழிமுறைகளை முன் வைத்துப் போராடுவதாக நாங்கள் வரையறுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  முதலாவதாக மாவோயிஸ்டுகள் முன்வைக்கின்ற ஆயுதப் போராட்டப் பாதை. அரசியல் போராட்டத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள உறவை புறக்கணித்துவிட்டு ஆயுதங்களை முன்னிறுத்தி புரட்சியை நடத்தி முடித்து விட முடியும் என்ற அகநிலைவாதக் கண்ணோட்டத்தில் செயல்படுகின்ற வழிமுறை. புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே நாட்டு மக்களுக்கு விடிவை தரும் என்பதில் இவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், அவர்களின் நடைமுறை அதனை நோக்கி முன்னேறுவதற்கான கூறுகளைக் கொண்டதாக இல்லை என்பதை அவர்களது அரசியல் மற்றும் இராணுவ பாதை தெளிவாக முன்வைக்கின்றது. இரண்டாவதாக எமது அமைப்பு முன் வைக்கின்ற போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் ஆகிய இரண்டுக்கும் உள்ள உறவை அறிவியல் பூர்வமாக இணைத்து, மக்கள் திரள்வழியுடன் கொண்டு செல்கின்ற புரட்சிப் பாதை. அரசியல் போராட்டத்தின் நீட்சியாக ஆயுதப் போராட்டம் என்பதை முன்வைக்கின்ற அரசியல் மற்றும் இராணுவ பாதையை உள்ளடக்கிய பு

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

Image
 கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தும் போராட்டம் புதிய ஜனநாயக புரட்சிக்கு முன் நிபந்தனையாக மாறி உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட பயண அனுபவத்திலிருந்து நாமும் கற்றுக் கொள்வோம். #எனது_நீண்ட_பயணம் (#My_Long_March ) #சீனத்திரைப்படம்: #அறிமுகம்! #வீடியோ!! #அறிமுகம் சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை, நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்ததன் 70வது ஆண்டு நினைவாக மை லாங் மார்ச் என்ற திரைப்படம் சீனாவைச் சேர்ந்த ஆகஸ்ட் பர்ஸ்ட் பிலிம் ஸ்டுடியோவினால் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் Axis of War (The First of August, My Long March, Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 திரைப்படங்களில் இரண்டாவதாக வெளிவந்த ஒன்று. ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தில் குண்டு வீச்சுகளும், போராட்டங்களும், மனித முயற்சிகளும், வலிநிறைந்த அனுபவங்களாக, போராட்டத் துடிப்பின் எத்தனமாக அழுக்கும், ரத்தமும், தூசியுமாக படமாக்கப்பட்டுள்ளன.  சீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம். இதன் டிரைலர் யூடியூபில் சேர்க்கப்பட்டுள்ளது திரைப்படத்தின் டிவிடியை இணைய வழியாக வாங்கிக் கொள்ளலாம்.இத்