சுயவிமர்சனம் - திருத்தப்பட்ட பதிவு!
அன்பார்ந்த தோழர்களே! வினை செய் வலைப்பக்கம் மற்றும் முகநூல் பக்கத்தில் தோழர் கணேசன் பற்றி இளஞ்செழியன் என்பவர் எழுதியிருந்த இரங்கற்பாவில் அவரது இறுதி காலத்தில் சாதிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டதாக கருத்தை பதிவு செய்திருந்தார். தோழர் கணேசன் செயல்பட்ட அமைப்பு வாழ்க்கை முறையின் மீது அவதூறு செய்கின்ற வகையில் சாதிய சிந்தனை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது பரிசீலனை இன்றி வெளியிட்டதை தவறு என சுயவிமர்சனமாக உணர்கிறோம். இத்தகைய கண்ணோட்டத்தில் இரங்கற்பா எழுதிய இளஞ்செழியன் என்ற தோழருக்கும் இது பற்றி விமர்சனமாக சுட்டிக் காட்டி உள்ளோம். அவரது தனிப்பட்ட புரிதல்களின் அடிப்படையில் தான் எழுதிய கவிதை வரிகளின் தவறுதலாக உண்மைக்கு மாறான அர்த்தத்தை கொடுக்கும் வகையில் எழுதிய தனது தவறை உணர்ந்து மீண்டும் அவர் எழுதிக் கொடுத்த வரிகளை இங்கே பதிவிடுகிறோம். ஆசிரியர் குழு, வினை செய். தோழனே! கணேசனாய் களமாடிய அன்பழகனே! இப்படி ஒரு இரங்கல் தங்களுக்கு தெரிவிக்கும் அவல நிலை ஏற்படும் என இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஒருபோதும் எண்ணியதில்லை. கல்லூரியில் வெளிவந்த நாள் முதல் கரம் பிடித்து எமை அரவணைத்து உலகை புரிந்து கொள்ளும் மார