புதிய ஜனநாயகம். (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வெளிவந்துவிட்டது.
அன்பார்ந்த வாசகர்களே புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! பிப்ரவரி 2020 உடன் நின்றுபோன எமது புதிய ஜனநாயகம் இதழ் மே மாதம் 2022 முதல் முறையாக வெளிவருகிறது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி தற்போது அச்சு இதழாக புதிய ஜனநாயகம் மே மாத இதழ் வெளிவந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய-லெனினிய அரசியலை கொண்டு சென்று தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி செயல்பட்ட எமது அரசியல் வெகுசன பத்திரிக்கை, அதல் அரசியல் தலைமை குழுவின் தவறுகளினால் தடைபட்டு நின்று இருந்தது. தற்போதைய அரசியல் சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதற்கும் அதன் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை புரட்சிகர அமைப்பின் கீழ் அணி திரட்டுவதற்கும் புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து பணியாற்றும் என்பதை உறுதி அளிக்கிறோம். கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்கி வரும் இன்றைய சூழலில் ஒட்டு மொத்தமாக நாட்டின் பிரதான எதிரியாக ஆர் எஸ் எஸ்-பாஜக செயல்படுகிறது என்பதை முன் வைக்கிறோம். 90-களில் நமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி நாட்டை மறுக