ஒற்றைப் பண்பாடு எனும் வன்முறை : கீழடி அகழாய்வு – தமிழ்ப் பண்பாடு – வீ. அரசு



கீழடி அகழ்வாய்வு : வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன!

 

மதம் குறித்த விமர்சனம் தான்

எல்லா விமர்சனங்களுக்கும்

முன்நிபந்தனையாகவும் உள்ளது”

- காரல் மார்க்ஸ் 


’கடவுளின் மொழி’யாகச் சொல்லப்படும் சமஸ்கிருதத்தை, அதன் பண்பாட்டை, அதன் ‘உன்னதத்தை’ தலையில் தூக்கி ஆட்டம்போடும் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவின் ‘ஒற்றைப் பண்பாடு எனும் வன்முறை’யை விமர்சிக்கும் பேரா. வீ. அரசுவின் குறுநூலை இங்கே அறிமுகம் செய்கிறோம்.

மோடியின் கட்சி-மதச்சார்பான கட்சி, சமஸ்கிருதத்தை ஆட்சி பீடத்தில் ஏற்ற முயற்சிக்கும் கட்சி, புராணமே இவர்களுக்கு வரலாறு, தென்னிந்தியா வேறு – வட இந்தியா வேறு, வரலாற்று அடிப்படையிலேயே வேறுபட்டது என்பதை இக்கட்சி ஏற்காது, ஆட்சியிலிருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஒற்றைப் பண்பாட்டை பாசிச முறையில் திணிக்கிறது என்று முன்னுரையிலேயே கூர்மையாக விமர்சிக்கிறார் வீ. அரசு.

வரலாற்றுபூர்வமாக, ஒன்றன்பின் ஒன்றாய் அமைக்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள், அவற்றின் தில்லுமுல்லுகளைப் பிரித்துக்காட்டுகிறார்.   பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியம் 3 முக்கியவேலைகளைச் செய்தது.  1861ல் தொல்பொருள் ஆய்வுத்துறை, 1872ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 1905ல் மொழிகள் பற்றிய கணக்கெடுப்பு.  வட இந்தியா சார்ந்து அன்று பிரிட்டிஷார் செய்த ஆய்வுகளும், அண்மைக் காலத்தில் வட இந்தியா சார்ந்து இன்று தொல்பொருள் ஆய்வுகள் செய்வனவும், குறிப்பாக தென்னிந்திய ஆய்வு சார்ந்தும் ஒரு நேர்மையும் இல்லை.

தற்போது இந்தியாவில் 4 பகுதிகளாக இத்துறை உள்ளது.  மூன்று பகுதிகள் வட இந்தியா மட்டுமே சார்ந்துள்ளது.  1947க்குப் பின் 60 ஆண்டுகள் கழித்து 2007ல் தான் தென்னிந்தியப் பிரிவை உருவாக்கினார்கள்.  தென்பகுதி மக்களின் வரலாறு சார்ந்துள்ளதால் திட்டமிட்டே மோடி கும்பல் உண்மைகளைத் திரித்துக்கூற முயலுகிறது, இருட்டடிப்பு செய்கிறது. பிரிட்டிஷார் 1924ல் ‘சிந்து சமவெளி நாகரிகம்’ பற்றிய அறிவிப்பைச் செய்தார்கள்.

சிந்துசமவெளியின் திராவிடக்கூறுகள் வெளிஉலகில் பரவிடாமல் ஆரிய இன ஆர்.எஸ்.எஸ் எல்லா கிரிமினல் வேலைகளையும் அதிகார வர்க்கத்தின் பார்ப்பனப் பிரிவின் மூலம் நுண்மையாகச் செய்தது.  NCERT பாடத்திட்ட நூலில் மாற்றி எழுதியது; பல்கலைக் கழகங்களில் சிறிது சிறிதாக சரஸ்வதி நாகரிகத்துக்குத் தூபம் போட்டது; இதற்கெல்லாம் முன்பே 18ம் நூற்றாண்டு லண்டனில் உருவாக்கப்பட்ட ‘ஏசியாடிக் சொஸைட்டி’ மூலம் இந்தியா சம்ஸ்கிருதம் பேசிய மக்களின் நிலப்பகுதி என்றும், ஐரோப்பாவின் எரிகொள்ளி மாக்ஸ்முல்லர் மூலம் சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் மூல ஊற்றென்றும், அதன் இந்திய-வங்காளக் கிளை மூலம் வில்லியம் ஜோன்ஸ் வழியாக ‘மனு எனும் அரசியல் அமைப்புச் சட்டப் பிதா’ என்ற கற்பனையும், தந்திரமாக இம்மக்களுக்கு ‘ஹிந்து’ என்று பெயரிடலும் நடந்துமுடிந்தது.

அடுத்தடுத்து புராணபாத்திரங்கள் வாழ்ந்த இடங்கள் தேடப்பட்டன.  கிருஷ்ணன் ராதையோடு ஓடி விளையாடி இடம், ராமன் ‘அவதரித்து’ வளர்ந்து சீதையை மணம் புரிந்த இடம் என்று நிலப்பிரப்புக்குள் கட்டியமைக்கப்பட்டன.  நவீன அரசியலின் கூடவே இணையாக வளர்க்கப்பட்டன. இக் கதைக்குள்  ‘பாப்ரி மசூதியில் சிலை நுழைப்பு, பிறகு ரதயாத்திரை, எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்த ‘பாப்ரி மசூதி’ இடிப்பு என்றும், பிறகு ‘கோயில் கட்ட திட்டம்’, ஆட்சிக்கு வருமுன்பே ‘கோயில் கட்ட வாக்குறுதி’ ஆட்சிக்கு வந்த பின்பு, ‘கோயில் கட்டும்’ சட்டபூர்வ அறிவிப்பு என்று கதை வளப்பைக் கவனித்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரிய சாம்ராச்சியக் கனவு ஒரு திட்டமாக நகர்த்தப்பட்டதை விளங்கிக்கொள்ளலாம்.

இவை மட்டுமல்ல; அதிகாரவர்க்க பார்ப்பனிய ஆதிக்கம் மூலம் தெற்கே நடந்த ஆதிச்சநல்லூர் ஆரிக்கமேடு, கொடுமணல் ஆய்வுகள் முழுதும் வெளிவந்தால் ‘சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி நாடெங்கும் பரவிவிடுமே என்ற கிலி அவர்களைத் தொற்றியது. அண்மையில் கீழடி ஆய்வில் கிடைத்த ‘நகர ஆதாரங்கள்’, பானை ஓடுகளில் எழுதப்பட்டிருந்த ‘தமிழி’ பிராமி எழுத்துக்கள் மேலும் பீதி ஊட்டின.  எனவே, சங்க இலக்கியம், ஆற்றுப்படுகைகள், ஊர்கள், மக்கள் வாழ்வில் பயன்படுத்திய மொழி அனைத்தும் திராவிடத் தொடர்போடு இருப்பதையும், தங்கள் ஆரியக் கற்பனைக்குச் சாவுமணி அடித்துவிடுமென்றும் முடிவு செய்தார்கள். மிகச்சரியாக, மோடி ஆட்சியின் கட்டத்தில் கீழடி அகழ்வாய்வின் முடிவுகள் வந்தன.   அங்கே ஏராளமான நகர நாகரிகச் சான்றுகள் கிடைத்தன.   சங்க இலக்கிய கலித்தொகையில் சொல்லப்பட்ட  தாயக் கட்டைகள் கிடைத்தன.  மண்குடுவைகள், காளையின் தலை, மனித உடல்பாகம், மனிதத்தலை உருவம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.  கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள் (திராவிட நாகரிகம்) வாழ்ந்த சான்றுகள் வெளிவர வெளிவர பித்துப்பிடித்த மத்திய ஆட்சி, ஆராய்ச்சியைச் செய்த ஆய்வாளர் கோபிநாத் ராமகிருஷ்ணனின் ஆபீஸர் – பிரியட்/பருவ முறை முடிந்து விட்டதென்று கூறி தமிழுக்குத் தொடர்பில்லாத அதிகாரியை வடக்கே இருந்து மாற்றியிருக்கிறார்கள்.

ஆக, பல்தேசிய இன, மரபு, மொழி, மக்கள் வாழ்க்கை, புராண வாடையற்ற மதச்சார்பற்ற திராவிடத் தொடர்புள்ள நெடிய சிந்து சமவெளிநாகரிகத்தின் நீட்சி ஆகியவற்றை முடக்கிவிட ஆர்.எஸ்.எஸ் பாஜக முயலுகிறது.  ‘ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே சட்டம்’ ஒற்றை ‘இந்துப் பண்பாடு’ என்ற இரும்புத் தடிகொண்டு, அரச வன்முறை கொண்டு வெளியே சத்தமே தெரியாதபடி ஆரிய நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

கீழடி என்பது தமிழ் பிராமி – திராவிடக் கூறுகள் கொண்ட மாபெரும் வரலாறு வெளிச்சத்திற்கு வர, பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிராகப் போராடவேண்டும் என்பதை பேச்சுவழக்கு சேர்த்த எளிய ஒலிவடிவமாகவும், பின் இப்போது அச்சு (நூல்) வடிவமாகவும் வீ. அரசு காலத்தேவை கருதி வெளியிட்டுள்ளார்.

கீழடி என்பது எத்தனையோ ஆய்வுகளில் ஒன்று அல்ல – நாளைக்கும் வழிகாட்டும் நமது முன்வரலாறு; சமூகப் போராட்டங்களை இணைக்கும் – பூணூலுக்கு எதிரான – உயிர் இழையே கீழடி ; பார்ப்பன இந்துவெறிப் பாசிசத்தை களத்தில் எதிர்க்கும் ஒவ்வொருவரது கடமை கீழடிக்காகக் குரல்கொடுப்பதும் ஆகும்.

- பீட்டர்

#வெளியீடு : தடாகம்

#நூல் ஆசிரியர் : பேராசிரியர் வீ. அரசு
விலை : ரூ. 30

Comments

  1. நூல் வாங்குவதற்கான தொடர்பு எண் தரவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.