குஜராத்தில் கொரானா உயிரிழப்புகளை மறைக்கும் குஜராத் அரசு!


குஜராத் இந்த ஆண்டு மார்ச் 1ந் தேதி முதல் மே 10 வரை அறிவித்த கோவிட் இழப்புகள் 4218 மட்டும். ஆனால், மக்களிடம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கியதோ 1.23 லட்சம்.

குஜராத்திலிருந்து வரும் சமீபத்திய செய்திகள் கவலைக்குரியதாக இருக்கின்றன. ’திவ்ய பாஸ்கர்’ என்ற செய்தி நிறுவனம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோவிட் உயிரிழப்புகளையும், வழங்கப்பட்ட சான்றிதழ்களிலும் பெரும் எண்ணிக்கை முரண்பாடு இருப்பதாக வெளியிட்ட செய்தியை இப்பொழுது ஸ்கிரோல் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
கோவிட் உயிரிழப்புகள் குறித்து குஜராத் முதல்வர் சமாளிப்பதற்கு ஏதோதோ விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். எதிர்கட்சிகள் இப்பொழுது இந்த செய்தியை முன்னிலைப்படுத்தி இதுகுறித்த விரிவான விசாரணை தேவை என கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
குஜராத்தை பல ஆண்டுகளாக ஆண்ட மோடி குஜராத்தை தூக்கி நிறுத்தினார். அதே போலவே இந்தியாவைவும் தூக்கி நிறுத்துவார் என்று தான் பொய்யான பிரச்சாரத்தை நாடு முழுவதும் திட்டமிட்டே பரப்பினார்கள்.
குஜராத்தில் உள்ள பொது சுகாதார கட்டமைப்பு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை இப்போதைய கொரானா உயிரிழப்புகள் பல்லிளிக்க செய்துவிட்டன. குஜராத்தை ஆண்ட மோடி இந்தியாவை எவ்வளவு மோசமாக ஆண்டு கொண்டிருக்கிறார் என்பதை சர்வதேச ஊடகங்கள் கிழித்து தொங்கவிடுகின்றன.
ஒரு மோசமான பிரதமர் இருந்தால், எவ்வளவு உயிர்ச்சேதம் ஆகும் என்பதை கண் முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு மோசமான காட்சிகளை பார்க்க போகிறோம் என்பதை நினைக்கும் பொழுது கதி கலங்குகிறது.
கொலைகார மோடியே,
பதவியிலிருந்து விலகு!

- சாக்ரடீஸ்

விரிவான செய்திகளுக்கு!

https://scroll.in/latest/994906/gujarat-is-undercounting-covid-19-deaths-shows-divya-bhaskar-report?fbclid=IwAR39ERRJZwWhtoQMbDHnxkVqDAGbCZLBLh32MtOMRf_zLkhiyO6KuAYq6e8

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!