சிவசங்கர் பாபா எனும் பொறுக்கி சாமியார்!
நித்யானந்தா, பிரேமானந்தா வரிசையில் இணைந்துள்ளான் சிவசங்கர் பாபா. இந்தப் போலிச் சாமியார்களே பொறுக்கிகள்தான். அதிலும் இவன் கடைந்தெடுத்தப் பொறுக்கி. உலகத்திலுள்ள எல்லாக் கெட்டவார்த்தைகளுக்கும் பொருத்தமானவன்.
பத்ம சேஷாத்ரி பள்ளியால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள்ளாக, அதைவிட பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இவனது காமக் களிவெறியாட்டங்கள். சென்னை ஈசிஆர் கேளம்பாக்கத்தில் உள்ள ”சுஷில்ஹரி இண்டர்நேசனல் ஸ்கூல்” பள்ளியின் நிறுவனர்தான் இந்த 70 வயது கிழட்டுப் பொறுக்கி.
”கடவுளுக்காக வந்திருக்கிறேன். கடவுளாக வந்திருக்கிறேன்” என தன்னை விஷ்ணுவின் அவதாரமாகக் கூறிக்கொண்ட போலிச்சாமியார். பாலியல்வெறிபிடித்த ஜந்து. பிஞ்சுக் குழந்தைகளையும்கூட கடித்துக் குதறும் மோசமான மிருகம்.
மற்ற பள்ளிகளைப்போலவே, இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மூலம்தான் இப்பிரச்சினை வெளிஉலகத்துக்கு வந்துள்ளது. தற்போதைய மாணவிகளும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள அக்குழந்தைகளின் வாக்குமூலங்களை
காதுகொடுத்துக் கேட்கமுடியவில்லை. இவ்வளவுக் கேவலமான மிருகத்திடம் இந்தக் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என நெஞ்சம் பதறுகிறது.
பல்வேறு நாடுகளின் உயர்தர மதுபானங்கள், சாக்லேட்டுகள், பரிசுகளைக் காட்டி ஆசைகாட்டுவது. தம்மை கடவுளென நம்பவைப்பது, தன்னுடன் நெருங்கிப் பழகுவதற்கான சூழலை உருவாக்குவது. வற்புறுத்தி ஆபாசப் படங்கள் பார்க்க வைப்பது என மாணவிகளை பல்வேறு வழிகளில் சித்திரவதைப்படுத்தி இணங்க வைக்க முயற்சித்துள்ளான் இந்தக் காமுகன்.
அத்தோடு ”நான் கிருஷ்ணன், நீ கோபிகா” என சொல்லி குழந்தைகளை தாசிகளாக்கியுள்ளான். நிரந்தரமாகவே, கோபிகைகள் என சிலரை வைத்துக் கொண்டு தனது இச்சைகளை தீர்த்துக் கொள்வதோடு அவர்களை மாமா வேலை பார்க்க வைத்துள்ளான்.
”அவர் கடவுள் (Godman) அவருடன் உடலுறவு கொண்டால்தான், இந்தப் பிறவியே முழுமையடையும்” என்று கோபிகைகள், விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்களை வைத்து மாணவிகளை
மூளைச்சலவை செய்து அனுபவித்துள்ளான். ஆசிரியர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த சதை வெறிபிடித்த ஓநாய். ஒருசில ஆசிரியர்கள் நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் என பிள்ளைகள் சொல்கிறார்கள். ஆனால் இப்பிள்ளைகளைக் காப்பாற்றவோ அல்லது இந்தக் கேவலமான விசயங்களை வெளிக்கொணரவோ அவர்கள் என்ன முயற்சி எடுத்தார்களென தெரியவில்லை.அதிலும் மாமா வேலைபார்க்கும் ஆசிரியர்கள், ”கடவுள் சொல்வதை செய்ய வேண்டும். அவர் எது செய்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென” புகார் அளித்த பிள்ளைகளின் வாயை அடைத்திருக்கிறார்கள்.
5 ஆம் வகுப்பு படிக்கும் பிஞ்சுக் குழந்தைகளையுடம்கூட விட்டுவைக்கவில்லை இந்த மிருகம். அத்தோடு இந்த கீழ்த்தரமான மிருகத்திற்கு இணங்க
மறுத்தாலோ, பிற மாணவர்களிடம் பகிர்ந்தாலோ அல்லது புகார் அளித்தாலோ அவ்வளவுதான்.
அப்பள்ளி வளாகத்தில்
இருக்கும் கோயில் வழிபாட்டின்போது, கூடியிருக்கும்
பொதுமக்கள், மொத்த மாணவர்கள், ஆசிரியர்கள்
முன்னிலையில் தனக்கு இணங்காத, முரண்டு பிடிக்கும் மாணவிகளை ஒழுக்கக்
கேடானவர்களென பெயரைக் கூறி அசிங்கப்படுத்துவது. பெற்றோரிடமும்
அப்படி சொல்வது. வேண்டுமென்றே மதிப்பெண்ணைக் குறைப்பது.
தேர்வு எழுத விடாமல் செய்வது. அதை தேர்வுக்கு முந்தைய
நாள் சொல்வது என மனரீதியில் அணுஅணுவாகச் சித்திரவதை செய்துள்ளான். இதனால் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார்கள். தவிக்கிறார்கள்.
இருபாலரும் படிக்கும்
பள்ளி. ஆனால், ஆண்பிள்ளைகளை நெருங்குவது இல்லை.
எப்போதும் பெண்பிள்ளைகளுடனேயே இருப்பது, ஆசீர்வாதம்
என்ற பெயரில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, நடனம் ஆடுவது என பாலியல் வெறியனாகவே இருந்திருக்கிறான். ஆனால், அதெல்லாம் ”அவர்களிடம் உள்ள
நெகட்டிவ் எனர்ஜியை எடுத்து வெளியேற்றிவிடத்தான்” என நியாயப்படுத்துகிறது
இந்த மிருகம்.
இப்படி இவன்
மீதான குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே போகின்றன. இவனது பாலியல் அத்துமீறல்களை, வல்லுறவுகளை, கும்பல் வல்லுறவுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. இவ்வளவு
வக்கிரப்புத்தி கொண்டவன்தான் கடவுளா? மனிதனாக ஏன், விலங்காகக்கூட மதிக்கத் தகுதியில்லாதவன்.
இருபது ஆண்டுகளாக
தொடரும் இக்குற்றங்கள் ஏன் வெளியுலகத்துக்கு தெரியவில்லை? நகருக்கு ஒதுக்குப்புறமாக, ஆளரவம் அதிகமற்ற
இடத்தில் இருப்பதும் மாணவர்கள் தங்கிப்படிக்கும் பள்ளியாக இருப்பதும் முக்கியக் காரணம்.
64 ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது இவ்விடம்.
இவ்வளாகத்தைச்
சுற்றி 400 குடும்பங்களை - கோயிலுடன் தொடர்புள்ளவர்களை
-குடிவைத்துள்ளான். இவர்கள் இந்த நாயிக்கு கோபிகர்கள்
எனவும் சொல்கிறார்கள். மேலும், பிரவீணா
மருத்துவமனை ஒன்றும் இங்கு செயல்படுகிறது. இதனால் பயன் அடைபவர்களும்
தெரிந்தோ தெரியாமலோ இந்த நாயின் அபிமானிகளாக இருக்கிறார்கள். மாணவிகளுக்கு கருக்கலைப்பதும் இங்குதான் செய்யப்படுகிறது போலும்.
ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள், கோபிகைகள் என பள்ளி
மாணவிகள் சிலர், கோயிலில் பணிபுரிபவர்கள் என ஒரு வட்டத்தை தன்னைச்
சுற்றி ஏற்படுத்திக் கொண்டுள்ளான். இவர்கள் அவனுக்கு உளவாளிகளாக,
இவனது பிம்பத்தை தூக்கிப் பிடிப்பவர்களாக, இவனது
பிரச்சாரகர்களாக, மாமாக்களாக இருந்திருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமாக
இந்த நாய்க்கு அரசியல் செல்வாக்கும் இருக்கிறது. பாஜகவின் ஆதரவாளராக, பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவனாக
இருக்கிறான். பாஜகவின் தலைவர்களான திரு.கே.டி.ராகவன், திரு.இல.கணேசன் ஆகியோரை முன்வைத்து
நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளான். கே.டி.ராகவனுடன் இந்த எச்சக்கலை இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இப்போதும், இவனின் கடைந்தெடுத்தப் பொறுக்கித்தனங்கள் எல்லாம் வெளிவந்துவிட்டபோதும்கூட, இவனை தூக்கிப் பிடிக்க ஒரு
கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. இவன்மீதான புகார்கள் குவிந்த
அடுத்த நாளே, புதிதாக நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பாபா, மகான், கடவுள்,
கிருஷ்ணர், அது, இது என இந்தப்
பொறுக்கியை புகழ்ந்து தள்ளி எழுதியுள்ளனர். புகாரளித்த மாணவிகளை,
பாபா மீது வன்மம் கொண்டவர்கள் என அவர்களது ஒழுக்கத்தையும் விமர்சிக்கிறார்கள்.
இவைதான் அவனது பலம். அவர்கள் யாராக இருக்கும் என்பதும்
யூகிக்கக்கூடியதே.
மேலும், இந்தியா முழுக்கவே பாலியல் குற்றங்கள் தினசரி நிகழ்வாக மாறிப்போயிருக்கும்
அவலத்திற்கு இந்த அரசுதான் காரணம். காவல் நிலையங்களும்,
நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளின், செல்வாக்கு உடையவர்களின்,
உடைமை உள்ளவர்களின் கையாளாக இருக்கின்றன. சாதாரண
மக்கள் நெருங்க பயப்படுவதாக இருக்கின்றன. இந்த நச்சு சூழல்
தான் இந்தப் பொறுக்கிகளுக்கு மிக சாதகமாக இருக்கிறது.
இப்பொழுது மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக, தலைமறைவு நாடகத்தை அரங்கேற்றிக்
கொண்டிருக்கிறான். இப்போதும் எங்காவது ஒரு மூலையில் தனது பணபலத்தை,
அரசியல்பலத்தைக் கொண்டு சொகுசாக வாழ்ந்து கொண்டிருப்பான்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் நிலை? பள்ளிக் கட்டணம்
குறைவு என்பதால் இப்பள்ளியில் சேர்த்த பெற்றோரும், சீரழிக்கப்பட்ட,
உடனிருந்த பிள்ளைகளும் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்.
பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த வலி
தெரியும். புரியும்.
இவனால், எத்தனை பிள்ளைகளின் கனவு சிதைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவுபேர் வாழ்க்கை சீரழிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம்
மாற்ற முடியாது. ஆனால், இந்தப் பொறுக்கி
நாய்க்குக் கொடுக்கப்போகும் தண்டனைதான், இவர்களுக்கு சற்று ஆறுதலைத்
தரும். புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கத்தின் மீதுள்ள
நம்பிக்கையால் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்துள்ளனர் மாணவிகள்.
எனவே, பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட அரசாங்கம்,
இந்த காமச் சாமியாரையும், அவனது கூட்டாளிகளையும்
கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக் குழுக்களை
அமைக்க வேண்டும்.
இப்பள்ளியின்
சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதுபோல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா உண்டு உறைவிடப் பள்ளிகள், சாமியார்கள்
நடத்தும் பள்ளிகள், ஆசிரமங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உலகில் சோசலிசத்தின் தாக்கத்தின் விளைவாக இன்றும்கூட
வளர்ந்த, வளருகின்ற பல நாடுகளில் கல்வி உயர்கல்விவரை அரசால் இலவசமாக தரப்படுகிறது. அதுபோல, அனைத்து
கல்வி நிலையங்களையும் அரசே ஏற்று நடத்தும்போது, சாதாரண மக்கள் இப்படிப்பட்ட அயோக்கியர்களை, கல்வி வள்ளல்களை நாடிப்போவது குறையும்.
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக என நடக்கும் அத்தனை பொறுக்கித்தனங்களையும் கண்டுக் காணாமல் இருக்கும் அவலநிலையும்
ஒழியும்.
அத்துடன் பாலியல்
குற்றங்கள் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். கூடவே, இச்சாமியார்கள்மீது பக்தர்களுக்குள்ள
மாயையை கலைக்க வேண்டும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு
இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்.
மேலும், பணபலம், அரசியல் செல்வாக்கு, அதிகார பலம் கொண்ட குற்றவாளிகளும் அரசால் சமரசமின்றி தண்டிக்கப்படும்போதுதான்
இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அது இந்த அரசுக் கட்டமைப்பில்
இருக்கின்ற சிக்கல். அதை மாற்றாதவரை இதுபோன்ற குற்றங்களை முழுமையாகத்
தடுக்க முடியாது.
-ஆதிரா.
#வினைசெய்
Comments
Post a Comment