“ஜெயமோகனுக்கும் உண்மைக்கும் துளி அளவாவது சம்பந்தம் உண்டா ?
நண்பர்களே…. அண்மையில் (பிப்.27, 2024) எழுத்தாளர் ஜெயமோகன் அவரது வலைதளத்தில் “தமிழில் தத்துவம் உண்டா ?” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் ( பொய்யுரையில் ) “ இந்திய தொல்நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.” என்று கூச்சமில்லாமல் எழுதுகின்றார். அப்படி அவரால் குறிப்பிடப்படுகின்ற தொல்நூல்களில் ஒன்று கூட 18ம் நூற்றாண்டில் ஜெர்மனி மொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஜெயமோகனைப் பற்றி நான் முன்பு ஒரு தடவை எழுதியுள்ள கட்டுரையில், “இவர் தப்பிலும் அடிப்பார், தவிலிலும் அடிப்பார், கிழிந்துவிட்டால் தச்சுகிட்டும் அடிப்பார்” என்று இவருடைய குணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இத்துறையில் ஈடுபட்டு எழுதி வருகின்ற உலக அறிஞர்கள் எவரும் 18ம் நூற்றாண்டில் ஜெர்மனி மொழியில் அவ்வாறான நூல்களை வெளியிட்டதில்லை. இவ்வாறு உலக அறிஞர்களே துளி கூட அறியாத இத்தகைய உலக “பேரூண்மையைக்” கண்டுபிடித்த ஜெயமோகன் தன்னுடைய அரிய கண்டுபிடிப்பின் வாயிலாகத் தெரிந்த ...